2010/06/30

சிறகுகள் விரியும்


சோகத்திலும்
சுகங்கள் தோன்றும்
தனிமையும்
துணையாய் தெரியும்
பிரிவிலும்
பாசம் புரியும்
தொலைவில் இருந்தும்
நெருக்கமாய் உணரும்
நிஜங்கள் கசக்கும் நேரத்திலும்
நினைவுகள் இனிக்கும்

அழகை மட்டுமல்ல
கண்ணீரையும் 

கண்கள் ருசிகட்டும்.

சுகம் மட்டுமல்ல

சோகமும்
வாழ்வில் உணரபடட்டும். 

வலி அறிந்தால் 
உணர முடியும் 
சுகம் என்னும் சுவையை...
துன்பம் வந்தால்
ரசிக்க தெரியும்
வாழ்க்கையின் இனிமையை...இன்பம் 
மட்டுமே வாழ்வானால்
அதில் ஏது இன்பம் 
சுகம் கண்ட விழி
ஓர் நாள்
சோகமும் பெற்று தெளி..

2010/06/25






பௌர்ணமி நிலவைப் பார்த்தேன்;
உன் முகத்தை கண்டு ரசித்தேன்.
அதன் பின்னணியில் கார்மேகத்தை பார்த்தேன்;
உன் கூந்தல் கண்டு ரசித்தேன்.


மின்னல் பளிச்சிடுவதை பார்த்தேன்;
உன் விழிகளை கண்டு ரசித்தேன்.
தோட்டத்து ரோஜா மலர்வதை பார்த்தேன்;


உன் இதழ் கண்டு ரசித்தேன்.
மலர் மனம் வீசுவதை நுகர்ந்தேன்;
அதில் உன் வாசம் உணர்ந்து கிறங்கினேன்.


ஒன்று சொல் பெண்ணே,
உன்னை மனதை நான் பார்க்கையில்
அதில் என்னைக் கண்கொண்டு ரசிப்பேனா..?


நிஜங்கள் என்னை
நேர்காணல் நடத்தும்போது
நேற்றைய நிழலாய்
நீ திசைகாட்டி செல்கிறாய்!


நீயா இது….
என் முன் நிற்கும் நீயா இது?
குளக்கரை பாசிகளாய் என்னுள்
படர்ந்து பரந்திருக்கும்
நீயில்லை நீ…….!


கருணை வழிந்த கண்களில்
கொடூரம் சிந்தும்
நீயில்லை நீ…….!


அளவிலா அன்புடையவனெயென நானும்
அதிகரிக்கும் அன்புகொண்டவளெயென நீயும்
நம்மால் சித்தரிக்கப்பட்ட
ஒரு மழைகாலத்தில் என்னுடனிருந்த
நீயில்லை நீ………..!

2010/06/04

உனக்கும் எனக்குமான

காதலைப் பிரிக்க

காதலால் கூட
முடியவில்லை!

எதிர்ப்புகளைச் சுருட்டி
வெற்றிச் சரித்திரமானது
நம் காதல்!
நினைத்த பொழுது

பாயை விரிக்கும்
உரிமை பெற்ற நேரம்...
நம் காதல்........

2010/06/02



தூறலாய் ஆரம்பித்து
பெரும் மழையாய் பொழிகிறது
உன் உண்மையான ஸ்நேகங்கள்!
என் கற்பனைச் சதுக்கத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த
கனவுகள் எல்லாம்
அத்து மீறிப் பிரவேசம் பெற்றது
எல்லாம் உன்னைக் கண்ட பின்புதான்!
ஓ!…என் கண்ணுக்குள்
ஒளியுமிழும்
ஒரு வண்ணப் பூச்சியாய் நீ!
என் நெஞ்சுக்குள் இராகம் பாடும்
ஒரு சின்னப் பூங்குயிலாய் நீ! ம்ம்…
நீயும்
உன் நினைவுகளும்
நிஜமாய் என்னுள்
நிறைந்திருக்கும்
ஆத்ம திருப்தியோடு
நம் நேசிப்புக் காலங்கள்
நித்தமும் தொடர…
பனித்துளிபோல்
பரிசுத்தமான உன் அன்பில் இதுவரை
நனைந்த நினைவுகளோடும்…
இனி நனையப் போகும்
ஈர நினைவுகளோடும்…
நனைந்து கொண்டிருக்கிறது
இந்த மனசு!



காதலிக்க தெரியாமலா
இத்தனை நாள்


காத்துக் கொண்டிருந்தேன்.
என்னுள் வழிய வழிய
பொங்கும் காதலை தாங்க
இந்த அண்டம் முழுவதும்
கூட போதாதே !


யாரிடம் கொட்டுவது
என்று தானே
காத்துக் கொண்டிருந்தேன்.
உன் கண்களை கண்டேன்,
காதலில் விழுந்தேன்..