நேர்காணல் நடத்தும்போது
நேற்றைய நிழலாய்
நீ திசைகாட்டி செல்கிறாய்!
நீயா இது….
என் முன் நிற்கும் நீயா இது?
குளக்கரை பாசிகளாய் என்னுள்
படர்ந்து பரந்திருக்கும்
நீயில்லை நீ…….!
கருணை வழிந்த கண்களில்
கொடூரம் சிந்தும்
நீயில்லை நீ…….!
அளவிலா அன்புடையவனெயென நானும்
அதிகரிக்கும் அன்புகொண்டவளெயென நீயும்
நம்மால் சித்தரிக்கப்பட்ட
ஒரு மழைகாலத்தில் என்னுடனிருந்த
நீயில்லை நீ………..!



