2011/11/12

காத்திருப்பது சுகம்
காதலி வருவாள் என்றால் - ஆனால்
காதலி வர மாட்டாள் என்று தெரிந்தும்
காத்திருக்கிறேன்!!!
காத்திருப்பேன் ஆயுள் முழுவ‌தும்...
காரணம் - காதல்…உன் மேல் 
வைத்துள்ள உண்மை காதல்!!!

2011/11/07

காதலித்தால் கனவுகளும் கதைகள் பேசும்
வார்த்தைகள் வர்ணனையாய் கவிதையாகும்
தூக்கத்தில் பாதி அவள் நினைவில் கரைந்துவிடும்
ஏக்கத்தில் மறுபாதி மனதோடு கதை பேசும்
எண்ணங்கள் கூட அவள் நினைப்பால் இனிப்பாகும்


கண்மணியே என் கவிதைக்கு 
இறக்கை இருந்தும் 
உன்காலடியில் கிடக்கவில்லை
பாசம் நீ வாசம் நீ 
நேசம் நீ சோகம் நீ 
ஆனால் 
என் சுவாசம் நீ அல்ல 
என் உயிர் கவிதைகள் தான்

2011/11/04

நிஜங்களை விட நினைவுகள் சுகமானவை
அதனால் என்னவோ நீ இன்றி
நான் உன் நினைவுகளுடன் வாழ்கிறேன் .
காதலுடன் ..........I LOVE YOU ........


காத்திருப்பதில் கூட ஆனந்தம் அதிலும்-
நீ காத்திருந்தால் அந்த தருணத்திலாவது 


என் நினைவுகள் உனை சூழ்கிறதே என்று
நான் காத்திருந்தால் மீண்டும் எனை விட்டு 


பிரிந்து விடுவாயோ என்று ஓர் பரிதவிப்பு 
மொத்தத்தில் ஏக்கமும்  பரிதவிப்புமே......


நாம் காதலும் .........!!!
நாம் வாங்கி வந்த வரமா?.... 


ஏக்கம் கொண்ட ஏராளக் கனவுகள்
உன்னை காணும் வரை கலையாது
என் கனவுகளும் கற்பனைகளும்..
உன்னை காணும் வரை.................???


உன்விழிகளுக்கு நான்
என்விழிகளுக்கு நீ
உன்மூச்சில் நான்
என்மூச்சில் நீ
உன் நினைவில் நான்
என் நினைவில் நீயும்
காதலர்களாக வாழ்கிறோம் ....

உன்னை பார்த்தாலே 
எனக்கு பேச்சும் வரவில்லை 
மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை 
நண்பனை கண்டவுடன் இதயத்தின் 
ஓர விளிம்பில் ஒரு வித நடுக்கம் 
ஆனால் உன்னை கண்டாலே மூளைக்குள் 
ஆயிரம் பூக்கள் பூக்கின்றன...
இதுதான் காதலா.......!!!

2011/11/01

உன்னையே எண்ணி உருகிநின்றேன் அன்பே
என்னைக் கலந்திடநீ என்று வருவாயோ
கன்னம்பிடித்தழகு காணஉந்தன் கையிருக்க
கட்டழகை வெட்டவெளிக் காற்றே தழுவுதய்யா...???


எந்த நாடு சென்றாலும்.
உன் நினைவுகள் - என் 
நெஞ்சை விட்டு அகலாது.
உன் மழலை பேச்சில்
வரும் மயக்கம்............
உன் கன்னம் குழிச்சிரிப்பில் 
வரும் கலக்கம்...............
உன் கண் பார்வையில் 
வரும் காதல்




கொஞ்ச நேரத்தில் 
உன்னை குட்டிவிட்ட
குற்றத்திற்காய் எட்டு 
கண்களிலும் சொட்டு சொட்டாய்
 ஈரம் வைத்து கொண்டது  குடை.


பணி முடிந்ததும் பத்திரமாய் 
கூடு சேரும்
குருவிபோல் குடைக்குள் 
கூடி குடி போனாய்.....

பழகிப் பிரியும் துயரமெல்லாம்
காதல் வழக்கமே
பிரிந்து கூடிப் பழகிப் பிரிய
மனசு வலிக்குமே

கோர்வையாக வழிந்த
கண்ணீர் கோர்த்திருக்கின்றேன்
கோலமயில் இரத்தினமே
மாலையாக்கிக்கோ........


உன்னுடல் இயக்கும்
உன் இதயத்துடிப்போடு
இயங்கிகொண்டிருந்த நாட்களில்
உன் ஒற்றை புன்னகையால் என்


உயிருக்குள் ஒளிந்த நீ
நீயில்லை……….!
அன்று நான் வேறு,

நீ வேறு என்ற நீ


நீயில்லை…….
நிச்சயமாக ‘நான்’ பிரசவித்த
நீயில்லை...???..நான்.


 நீ...........................!!
போதுமடா நீ நடத்தும் இந்த நாடகம்
இந்த பெண்மைக்குள் 
நீ செய்யும் இம்சை யாடையை

என் காதலுக்கு கவிதை 
என்ற பெயரை தந்திட்டாய், 
என் கவிதைக்கு- நீ 
எப்போ உயிர் ஆகுவாய்.......!!! 

உன் பேச்சில் நானும் மயங்கி போனேனே, 
உன் பார்வை பட்டு நானும் உருகி போனேனே

மனதுக்குள் ஒழித்து வைத்த உன்தன் காதலை, 
என் மன மகிழ அதை நீயும் கூறுவாயோடா 


உனக்குள் உள்ள உணர்வை
உணர தெரிந்தால்...
உன் மனதின் கனத்தை
மதிக்க மறந்தால்...
உன்னை நீயே
செதுக்க தெரிந்தால்.

என்னவளின் 
பெயர் தான்


பிம்பமாய் 
விழுந்தது

இது மேஜிக் 
அல்ல.. காதல் !

மழைத்துளிகள் மண்ணை 
அரவணைக்க படையெடுக்கின்றன
வானவில்லை குடையாக்கி
மேள தாளங்களோடு 

நொடியில் மின்னலடித்தது-நீயும்
நானும் கைகோர்த்து மழையில்
நீராடியது....!

விடியும் விடியல்கள் - உன்
நினைவுகளைப் பறைசாற்றிச்செல்ல 
என் இதயம் வடிக்கிறது
ஊமை ராகங்கள்....!


"எந்தன் குரல் கேட்டு
உந்தன் பேச்சதனை மறந்தனையோ
என் கண்களைப் பார்த்து
உன் தூக்கத்தையும் தொலைத்தனையோ"