2010/05/26


உன் ஒரப் பார்வையில் - என்
உயிரோட்டத்தை நிறுத்தியவளே!

ஒளித்து வைத்த இரகசியங்களை
அம்பலபடுத்த செய்கிறாயடி.

உன் அழகின் ஆணவம்
என் ஆண்மைக்கு சவால் விடுகிறது.
பூவிதழின் மென்மையான புன்னகை
புவியின் சுழலை நிறுத்துகிறது.

தென்றலினும் மெல்லியதான்
 உன் சுவரிசம் - என்
சுவாசத்தை மூர்ச்சையடைய செய்கிறது.

"செல்"லரித்த பேச்சுகள் -
நீ பேசும் பொழுது மட்டும்
சிலிர்த்தே கேட்கிறேன்!

மழைத்துளிச் சாரல்
என் மீது படர்வதாய் உணர...
சாத்தானின் சத்தம் - காதோரத்தில்
"சனியனே! இன்னும் என்ன தூக்கம்..??"

தந்தையின் அறைகூவல்...
விடியலை உணர்கிறேன்!

கனா கண்டேனடி தோழி.......!!!!!
-

0 comments:

Post a Comment